Wednesday 1st of May 2024 04:17:23 AM GMT

LANGUAGE - TAMIL
-
தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் தொடங்கியது! சுமந்திரன் பங்கேற்பு! முன்னணி புறக்கணிப்பு!

தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழில் தொடங்கியது! சுமந்திரன் பங்கேற்பு! முன்னணி புறக்கணிப்பு!


அனைத்துக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

தற்போதைய அரசின் அடக்குமுறைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் எதிர்ப்பினை வெளியிடும் முகமாக ஒன்றிணைந்த தமிழ்கட்சிகளின் கூட்டம் இன்றுகாலை 10.30மணியளவில் ஆரம்பமாக விருந்த கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் முதற் தடவையாக வந்திருந்ததை அடுத்து ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவி அனந்தி சசிதரன் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு செய்து வெளியேறினார். இதேவேளை கூட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் பங்கேற்கவில்லை. கடந்த மாதம் அனைத்து கட்சிகளின் அழைப்பின் பேரில் உண்ணாவிரதப் போராட்டம் மற்றும் வடக்கு கிழக்கு தழுவிய முழுமையான கதவைப்பு கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் முகமாக இன்றைய தினம் ஒன்றிணைந்து தமிழ் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணம் இளங்கலைஞர் மண்டபத்தில் ஆரம்பமாகின்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சித்தார்த்தன், சுமந்திரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபைத் தலைவர் சிவிகேசிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிறேமச்சந்திரன், சிறீகாந்தா, சரவணபவன் உட்பட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.


Category: செய்திகள், புதிது
Tags: வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE